விண்ணைவிட்டு வா கண்ணே..!

See more by R.Manimala

Available at Select Retailers

கல்யாணி, காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றி கண் மூடி வணங்கினாள்.
 'என் பொண்ணுக்கு ஏத்த மாதிரி நல்ல வரன் அமையணும். நான் எப்பவும் தீர்க்க சுமங்கலியாகவே இருக்கணும்!'
 வெளியே 'டமார்' என்று இடிச் சத்தம் கேட்க, பட்டென கண் திறந்தாள்.
 நேற்றெல்லாம் வலுத்துப் பெய்த மழை, இன்னமும் விடாமல் தேம்பித் தேம்பி அழுதுக்கொண்டிருந்தது.
 "போதும்... அவங்களை தொந்தரவுப் பண்ணினது. வர்றியா, பசிக்குது!"
 சாப்பாட்டு மேசை முன் அமர்ந்திருந்த சக்தி, தட்டில் மெல்ல தாளம் போட்டுக்கொண்டிருந்தாள்.
 "என்ன... கிண்டல் பண்றியா? சாமி கும்பிடக்கூட விடமாட்டேங்கிறே?"
 "என்ன கும்பிடப் போறே? பொண்ணுக்கு கல்யாணமாகணும். எப்பவும் பூவும், பொட்டோட இருக்கணும். அதுக்காக அப்பாவுக்கு கூன் விழுந்து வளைஞ்சு நடக்கணும்னுதானே?"
 "அடிப்பாவி!" வாயைப் பொத்திக்கொண்டாள். "எப்படிடி இத்தனை சரியா சொல்றே... மனசுக்குள்ளே புகுந்து பார்த்த மாதிரி?"
 "உன்னை மாதிரி பெண்களுக்கு வேற என்னம்மா வேண்டுதல் இருந்துடப் போகுது? மத்திய அரசு அதிகாரியா வேலை பார்க்கற புருஷன். 'சாப்ட்வேர் கம்பெனியில 'டீம் லீடரா' நாற்பதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கற- கல்யாணமாகாத அழகான பொண்ணு! ஒரு கோடி மதிப்புள்ள சொந்த வீடு. தேவையான வசதி வாய்ப்பு, வங்கி இருப்புன்னு அமர்க்களமா இருக்கிற கல்யாணிக்கு வேறென்ன வேண்டுதல் இருக்கப் போவுதாம்?"
 "பாரேன்... பேர் சொல்லி பேசறதை?"
 "ஏன்... சொன்னா என்னவாம்?"

முழுக்கைச் சட்டையை அணிந்து கை பொத்தானைப் போட்டுக்கொண்டே மகள் பக்கத்தில் அமர்ந்தார் கைலாசம்.
 "உங்களாலதான் அவ கெட்டுப் போறா. பெத்தவங்களை பேர் சொல்லிக் கூப்பிடுறது என்ன மரியாதையாம்?"
 "பேர் சொல்லத்தான்டி பிள்ளையைப் பெத்துக்கறோம்."
 "அப்படி சொல்லு கைலாசம்!"
 ஒரு கணம் அவர் திகைத்துதான் போனார்... மகள் அப்படிச் சொன்னதும்.
 "அம்மாடி... அப்பாவையே கவுத்துட்டியே!"
 "சும்மா... உங்க பொண்டாட்டிய கலாய்க்க..."
 அழகாய் சிரித்த சக்தி, மலர்ந்த பூவைப்போல் கொள்ளை அழகாய் இருந்தாள். கன்னங்களில் விழுந்த சிறு குழிகளும், மோவாய் பள்ளமும் தனிப்பட்ட வசீகரத்தைத் தந்திருந்தன.
 'ஹாட்பேக்'கைத் திறந்து இடியாப்பம் எடுத்து இருவரின் தட்டிலும் வைத்து தேங்காய்ப்பால் ஊற்றினாள்.
 "என்ன கல்யாணி இது?"
 "பார்த்தா தெரியலையா?" நக்கலாய் கேட்டாள் கல்யாணி.
 "ஓ... சேமியா உப்புமாவா?" பெரிதாய் வியந்துக் கேட்டார் கைலாசம்.
 பொங்கிய சிரிப்பை சக்தி உள்ளுக்குள் மென்றாள்.
 கல்யாணி கோபமாய் கணவரைப் பார்த்தாள்.
 "இதைப் பார்த்தா உப்புமா மாதிரியாத் தெரியுது... இடியாப்பம்."
 "இதானே வேணாங்கறது. பொய்தானே சொல்றே? பாரு... உதிரி உதிரியா இருக்கு.

"நல்லாத்தானே பிழிஞ்சேன். சனியன், ஒழுங்கா வரலே? என்ன இப்ப? முழுசா அப்படியேவா முழுங்கப் போறீங்க? பிய்ச்சு பிய்ச்சுதானே சாப்பிடப் போறீங்க? தெனமும் எதையாவது குறை சொல்றதே வேலையாப் போச்சு உங்களுக்கு."
 முகம் சிவந்து போனாள் கல்யாணி.

Other books by R.Manimala