அதிர்ச்சி பரவிய முகத்தோடு ஆத்மாவையும், பூமிகாவையும் ஒரு முறை நிமிர்ந்து பார்த்தார் ரவியாதவ்.
பிறகு தொடர்ந்து டெலிபோனில் பேசினார்.
"போலீஸில் இன்பார்ம் பண்ணினீர்களா?''
"....."
''சரி.''
ரிசீவரை வைத்தவர் நிமிர்ந்தார்... உச்ச பட்ச கவலையைக் குரலில் பூசிக் கொண்டு சொன்னார்.
''ஆத்மா நீங்கள் இரண்டு பேரும் வந்த பைக் சில நிமிஷங்களுக்கு முன்னால் அக்னி துணுக்குகளாய் வெடித்துச் - சிதறி இருக்கிறது.''
அதிர்ச்சி இவர்கள் முகத்தையும் தொற்றிக் கொண்டது.
"எ... எ... என்ன?''
அவரே தொடர்ந்து சொன்னார்.
"இந்த நிமிஷத்திலிருந்து நீங்கள் இருவரும் பலத்த பாதுகாப்பின் கீழ் இருக்க வேண்டியது அவசியம்...''
கண்களில் மெல்லிய பய ரேகைகள் விழுந்து இருக்க பூமிகா கேட்டாள்.
''யார் எங்களைக் கொலை செய்ய முயன்று இருக்கிறார்கள்? எதற்காக இந்தக் கொலை முயற்சி?''
"இதையெல்லாம் கண்டுபிடிக்க போலீஸ் முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறது.''
"ஸார் இது கவலை தரும் விஷயம் மட்டும் இல்லை பயத்தையும் தருகிறது.'துணிச்சலான காரியத்தை நாஸா உங்களிடம் ஒப்படைக்க இருக்கிறது! பயம் என்ற வார்த்தையே நீ உச்சரிக்கக் கூடாது பூமிகா.''
"ஸார்... பதினைந்து நிமிஷங்கள் தாமதமாய் நாங்கள் உங்களை சந்திக்க வந்திருந்தால் எங்கள் கதி என்னவாகியிருக்கும்!''
"வாஸ்தவம்தான். உங்கள் இருவரையும் ஆபத்து சூழ்ந்திருப்பது இப்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இதற்கப்புறமும் உங்கள் பாதுகாப்பில் நாங்கள் அலட்சியமாய் இருக்கப்போவதில்லை. நடந்தது நடந்து விட்டது. இதைப் பற்றி பெரிதாகக் கவலைப்பட வேண்டாம். உங்கள் கடமைகளை வழக்கம் போல் செய்யுங்கள். நான் உங்கள் உயிர்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறேன்.''
ஆத்மா புன்னகைத்தான்.
"பெண்ணுக்கே உரிய சுபாவ பயத்தில் பூமிகா பேசிவிட்டாள். இது அவளுக்கு ஏற்பட்டிருக்கிற தற்காலிக பயம்தான். அதை தெளிய வைக்க நானாயிற்று ஸார்!''
ரவியாதவ் சிரிக்க ஆத்மா தொடர்ந்தான்.
"மிகப் பெரிய வாய்ப்பு எங்கள் வீட்டுக் கதவை தட்டியிருக்கிறது! எங்களால் இந்தியாவுக்கே பெருமை கிடைக்கப் போகிற இந்த நிமிஷங்களில் எங்களின் மேல் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை நிச்சயமாய் நாங்கள் வீணாக்கவே மாட்டோம்.''
"குட் ஆத்மா! மை - அட்வான்ஸ் கங்கராஜுலேஷன்ஸ் ஃபார் யுவர் ஃபோர்த் கமிங் சக்ஸஸ்.''
"தாங்க்யூ ஸார்.''
கை குலுக்கி விடை பெற்றார்கள்.
பூமிகாவின் உள் மனசில் மட்டும் இன்னமும் ஒரு நூலிழை பயம் மிச்சமிருந்தது.
அந்த இன்ஸ்பெக்டர், 'ஆத்மா, பூமிகா'வின் கையைக் குலுக்கி, ''க்ளேட் டு மீட்யூ...'' சொல்லி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.அமெரிக்க நாஸாவின் கையில் உங்களை ஒப்படைக்கும் வரை உங்கள் பாதுகாப்புக்காக என்னுடைய தலைமையில் தான் ஒரு செக்யூரிடிபோர்ஸ் அமைத்து இருக்கிறார்கள்."
சொன்ன இன்ஸ்பெக்டர் நாற்பது வயதைத் தொட்டு இருந்தார். கிருதா ஓரம் சொற்பமாய் நரை. அளவான தொப்பை. அரைக் கை சட்டைக்கு வெளியே தெரிந்த இரும்பு மாதிரியான கைகளிலும் - கன்னங்களுக்குக் கீழே புடைத்திருந்த இறுக்கமான தாடையிலும் அடுத்தவர்களை மிரளவைக்கும் கம்பீரம் மிச்சமிருந்தது.
ஆத்மா கேட்டான்.
"அந்த பைக் வெடிப்பு சம்பவம் பற்றி ஏதாவது துப்புகிடைத்துள்ளதா இன்ஸ்பெக்டர்?''
"சக்தி வாய்ந்த ஆர்.டி.எக்ஸ் ரசாயனத்தால் தயாரிக்கப்பட்ட குண்டு வெடித்துள்ளது. சிதறிக் கிடந்த சர்க்யூட்போர்டுகளை வைத்த அணு எலக்ட்ரானிக் டயம் பாம் என்று தெரிகிறது. ஹைடெக் அறிவோடு தயாரிக்கப்பட்டபாம்.''
''இந்தக் காரியத்தை செய்தது யாராக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?''
"விசாரணை தீவிரமாய் நடந்து வருகிறது. விரைவில் கண்டுபிடித்து விடுவோம்.''
"இந்த கொலை முயற்சிக்கு பின்னணியில் முக்கியமான ஏதாவது காரணம் இருக்க வேண்டும்.''
"எனக்குத் தெரிந்தவைரை ஒரே ஒரு மோடிவ்தான்."
"என்ன அது?''
"ப்ரொப்ஷனல் ஜெலஸி?''
"பொறாமையா?''
''எஸ் - இந்த விண்வெளித் துறையில் உங்களுடைய அசாத்தியத் திறமை யாரோ ஒரு எக்ஸ்க்கு பொறாமையை உண்டாக்கி இருக்கிறது. அந்த எக்ஸின் சதிதான் இந்த குண்டு வெடிப்பு.''
ஆத்மா, பூமிகா இருவரும் திகைப்போடு ஒருத்தரையொருத்தர் பார்த்துக் கொள்ள இன்ஸ்பெக்டர் தொடர்ந்தார்.